ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம்.
புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே.
எப்போதும் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்லுவார்கள். 6 மாதம் ஆன பிறகு குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்துவது பல பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.
ஆனால் எல்லா உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்க முடியாது. குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்த தொடங்கும் போது என்னென்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும் எதை கொடுக்கக்கூடாது என்பதை அறிந்த பின்னரே கொடுக்க வேண்டும்.
தேன் மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். இருந்தாலும் அதில் பாக்டீரியாவான குளோஸ்ட்ரிடியம் போட்லினம் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதாம். இது போட்லினம் என்ற நச்சுத்தன்மையை உருவாக்குகிறதாம். இந்த நச்சுத்தன்மை என்ன செஇகிறது எனறால் குழந்தைக்கு சோம்பலை உண்டாக்கும்.
சத்துக்கள் உறிஞ்சுவதை பலவீனப்படுத்தும், தசைகளை பலவீனப்படுத்தும் மற்றும் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் எந்நேரமும் குழந்தை எரிச்சலுணர்வையும், தலைச்சுற்றல் அறிகுறிகளுடனும் இருக்கும். இது ஒரு அரிய நோய்த்தொற்று தான். ஆனால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதல் பிறந்தநாள் வரை உங்கள் குழந்தைக்கு தேன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
பசும்பால் குழந்தைக்குஒரு வயது ஆகும் வரை தாய்ப்பாலைத் தவறாமல் கொடுங்கள். ஏனெனில் ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தையால் மாட்டுப் பாலில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நொதிப் பொருட்களால் செரிமானம் செய்ய இயலாது.
வேர்க்கடலை ஆரோக்கியமானதாக மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துமாம். எனவே வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால் அது ஒரு வயது ஆகாமல் கொடுக்காம இருப்பது நல்லது.
கடல் உணவுகளில் முக்கியமாக இறால், நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.உங்கள் குழந்தைக்கு கடல் உணவுகளைக் கொடுக்க நினைச்சீங்கனா ஒரு வயதிற்கு மேல் கொடுக்க தொடங்குங்கள் சில மீன்கள் சுறா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் உள்ளது. மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்க வேணாம்
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…