தண்ணீர் பஞ்சத்தால் பல கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலிய அரசு..!

Default Image
  • சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தண்ணீர் பிரச்சனை சர்வதேச தலைப்பு செய்தியானது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
  • தற்போது ஆஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம்
  • தண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனை ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ அவரது சமூக வளைத்ததில் தண்ணீர் பிரச்னையை குறித்து பதிவிட்டுருந்தார். தற்போது ஆஸ்திரேலியாவைக் கடுமையாக ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம் இதனால் மக்கள் அவதிக்குள்ளானார்.

ஆஸ்திரேலிய அரசு தண்ணீரை பயன்படுத்த பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. இரண்டு வாளி தண்ணீர் கொண்டு தான் வாகனங்களைக் கழுவ வேண்டும். நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

இதனை மீறுபவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் நடவெடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தனி நபருக்கு 150 அமெரிக்க டாலரும், வணிக நிறுவனங்களுக்கு 550 டாலரும் விதிக்கப்படும் என தெரிவித்தது. அதே நேரம் வெப்பமும் கடுமையாக அங்கு அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பத்தின் காரணமாகக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இதற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்