“ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் தங்களின் சொந்த செலவிலேயே நாடு திரும்ப வேண்டும்”- ஆஸ்திரேலிய பிரதமர்!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றால், தனி விமானம் மூலம் தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3 லட்ச பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கும் மத்தியில் பாதுகாப்பான முறையில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் விமானங்கள் அனைத்திற்கும் மே 15-ம் தேதி வரை தடை விதித்து ஆஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு, உடனடியாக அமலுக்கு வந்தது. தற்பொழுது ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள், கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் அரசு சார்பில் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்படுமா? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலே பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறிய அவர், ஐபிஎல் தொடர் ஆஸ்திரேலியா தொடரின் ஒரு பகுதியாக இல்லை என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், வீரர்கள் தங்களின் சொந்த செலவிலே வீரர்கள் இந்தியா சென்றடைந்த காரணத்தினால், அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்றால் தனி விமானம் மூலம் தங்களின் சொந்தச் செலவில் நாடு திரும்பலாம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago