சீனாவின் மனித உரிமை மீறல் விவகாரம்… ஐநாவில் 39 நாடுகள் கடும் கண்டனம்….

Published by
kavitha

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து, ஐ.நா.,வில், 39 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில், ஐக்கிய நாடுகள் பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை, ஐக்கிய நாடுகளுக்கான ஜெர்மனியின் நிரந்தர துாதர், கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார். அதில், சீனா, சிறுபான்மையினர் மீது நடத்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக, ஜிங்ஜியாங் மாகாணத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சுதந்திரமாக மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், வெளியில் நடமாடு வதற்கும், ஒன்று கூடி பேசுவதற்கும், பேச்சுரிமைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இது, உய்குர் கலாசாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல்.மேலும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, உய்குர் மற்றும் இதர சிறுபான்மையினரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அதேபோல் கட்டாயக் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, கொத்தடிமைகளாக்குவது போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஏராளமான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதேபோல, திபெத்திலும், சிறுபான்மையினருக்கு எதிராக, சீனா மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளது. இது, பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும். இத்தகைய மனித உரிமை மீறல்களை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஜிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் மக்களின் நிலையை நேரில் கண்டறிய, ஐ.நா., மனித உரிமைகள் குழு தலைவர், மிச்சல் பேச்லட் தலைமையிலான குழுவிற்கு, சீனா அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வாசிக்கப்பட்டதும், 55 நாடுகள் சார்பாக, சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை, பாக்கிஸ்தான்  வெளியிட்டது. அதில், ‘ஹாங்காங் பிரச்னை, சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

37 minutes ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

38 minutes ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

1 hour ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

1 hour ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

2 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

3 hours ago