இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்” இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நரேன் சமீபத்திய பேட்டியில் விக்ரம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கமல் சாரை பார்த்து தான் சினமா நடிக்கணும் என்று ஆசைப்பட்டேன்..விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியான பிறகு தான் படத்தில் நடிக்கவுள்ளேன் என எனக்கு தெரிந்தது… விக்ரம் டீசர் பார்த்துவிட்டு லோகேஷ் சாருக்கு கால் செய்து..டீசர் பயங்கரமா இருக்கு சார்-னு சொன்னேன்…அதுக்கு லோகேஷ் ..சார் நீங்களும் படத்தில் இருக்கீங்க என சொன்னார்…அந்த நிமிடம் எனக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது…
சிறிய வயதில் இருந்து நான் தீவிர கமல் சார் ரசிகன்… இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சந்தோசம்… விக்ரம் படத்தில் ஒரு காட்சியில் கமல்சார் என்னிடம் கேள்வி கேப்பார் அப்போது நான் அதற்கு பதிலளிக்க அவரை பார்க்கவேண்டும்…நான் அவரை பார்த்து அந்த வசனத்தை சொல்ல போறேன் கமல் சார் என்னை பார்த்தவுடன் பயந்துட்டேன்.
உடனே லோகேஷ் சார் இந்த அளவிற்கு பயந்து நடிக்க வேண்டாம்.. என கூறினார்… அதற்கு நான் அது நடிக்கல உண்மையாகவே எனக்கு பயம் வந்துவிட்டது என கூறினேன்” என்று நரேன் கூறியுள்ளார். மேலும் பேசிய நரேன் விக்ரம் படம் கமல் சாருக்கு மிக பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…