ஆப்கானிஸ்தானில் ராணுவ  படைகள் நடத்திய தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் !!!

Default Image
  • மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் ராணுவ  படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
  • இந்த தாக்குதலில் அங்கு 51 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. இதில் 2 பேர் பலியாகினர்

ஆப்கானிஸ்தானில்  தலீபான் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளார்.மேலும் பல இடங்கள் தலீபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படையின் உதவியோடு  கடுமையாக போராடி வருகிறது.

இந்நிலையில்  மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் ராணுவ  படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம்  நடந்த இந்த தாக்குதலில் அங்கு 51 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ராணுவம் உறுதி செய்துள்ளது. ஆனால் இது பற்றி தலீபான் பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில்  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. இதில் 2 பேர் பலியாகினர். மேலும் காரில் வைத்த வெடி குண்டு உரிய நேரத்துக்கு முன்னதாகவே வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்