#BigNews:பாக்தாத் கொரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தொட்டி வெடித்து 27 பேர் பலி

Published by
Dinasuvadu desk

ஈராக் தலைநகரின் தென்கிழக்கு பாக்தாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு 46 பேர் காயம்.

ஈராக் தலைநகரின் தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு மற்றும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.இது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வறுபவர்களின்  தங்குமிடமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தானது ஆக்ஸிஜன் தொட்டி வெடித்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து ஏற்பட்டவுடன் பல ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையை நோக்கி விரைந்து வந்து, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டதாகவும் ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் கூறுகையில் , நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட தரையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 120 பேரில் 90 பேர் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஈராக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,025,288 கடந்துள்ளது,இதுவரை 15,217 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது 897,966 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஏற்கனவே அந்நாடு பொருளாதாரத் தடைகள், போர் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் நெருக்கடி தற்பொழுது மேலும் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

19 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

40 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

42 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago