சூரியனை ஆராயவுள்ள ஐரோப்பிய விண்கலம்.! 27-10-19
‘விண்வெளி அவன்’2-11-19
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்துவதற்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘விண்வெளி அவன்’ பிஸ்கட் சுடுவதற்கான சரக்குகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு இந்த விண்கலன் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது. அதிகபட்ச வெப்பம், ஈர்ப்பு விசை இல்லாத நிலை ஆகிய சூழல்களில் பிஸ்கட் சுடும்போது, அதன் வடிவம், அமைப்பு ஆகியவை எப்படி இருக்கும் என்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் ஆராயுள்ளனர். இது விண்வெளியில் முதல் முறையாக பிஸ்கட் சுடும் நிகழ்வு, என்று இந்த சோதனையை வருணிக்கிறார்கள்.
விண்வெளியில் ஆடை பற்றாக்குறையால் நிகழாமல்போன வரலாற்று சிறப்புமிக்க முயற்சி.!
விண்வெளியில், விண்கலத்தைவிட்டு வெளியே செல்லும்போது பயன்படுத்தும் ஆடை இல்லாததால், வரலாற்றிலேயே முதல் முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கையை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ரத்து செய்துவிட்டது. கிறிஸ்டினா கோச் மற்றும் ஏன் மெக்லைன் பெண் விண்வெளி வீராங்கனைகள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று மின்கலன்களை பொருத்த வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது.
சந்திரயான்-2 விண்கலம் 22 ஜூலை 2019
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது.
இந்தப் பயணத்தின் சிறப்பு.!
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் ‘விக்ரம்’ பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு ‘பிரக்யான்’ உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த, இந்த செலுத்தும் வாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.
சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 7-ம் தேதி நடந்தது. ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன் தெரிவித்திருந்தார்.
லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது.!
சந்திரயானின் 2 திட்டத்தின் அதி முக்கிய நிகழ்வான லேண்டர் தரையிறக்கம் நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது லேண்டர் விக்ரமுடன் தகவல் தொடர்பு இழக்கப்பட்டது .
விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு.!
இதையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது. பின்னர் விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது. மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்கிறார்.
நாசா தங்கள் செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை செப்டம்பர் 17 ,அக்டோபர் 14, 15, நவம்பர் 01-ம் ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்டு வந்தது. நாசாவின் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதாக சுப்பிரமணியன் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்ததை சுப்பிரமணியன் நாசாவுக்கு மெயில் அனுப்பினார். சுப்பிரமணியன் ஆய்வை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்து நன்றி தெரிவித்தனர்.
செவ்வாய் துளையிடல், தோல்வியடைந்த நிலவு தரையிறக்கம், சூப்பர் மூன்.! பிரவரி-2019
முழு சூரிய கிரகணம்.! 26 டிசம்பர் 2019
டிசம்பர் 26-ம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே 16-ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.
அன்றைய சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்பட்டது. அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…