துனிசியாவில் ஆட்சிக்கலைப்பு – நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாக அதிபர் அறிவிப்பு!!

Published by
பாலா கலியமூர்த்தி

துனிசியாவில் அரசை கலைத்து, நிர்வாகத்தை தானே கையில் எடுப்பதாக அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்கா நாடான துனிசியாவில் அரசு கலைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றமும் கலைக்கப்படுவதாகவும் அந்நாட்டு அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து நாட்டின் நிர்வாகத்தை தானே கையில் எடுத்துக்கொள்வதாகவும், தனக்கு உதவ பிரதமர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் துனிசியா அதிபர் கைஸ் சையத் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கலைப்பு முடிவை ஆதரிக்கும் வகையில் துனிசிய நகரங்களில் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். அதிபரின் முடிவை சில கட்சிகள் கண்டித்திருந்த போதிலும், ஆட்சிக்கலைப்புக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான துனிசியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்ததன் காரணமாக அந்நாட்டு அரசை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி, துனிசியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டும், அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிக்கலைப்பு காரணமாக துனிசியா நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இஸ்லாமிய ஈர்க்கப்பட்ட என்னாதா கட்சிக்கு (Islamist-inspired Ennahdha party) எதிராக ஆயிரக்கணக்கான துனிசியர்கள் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

அரசாங்கத்தின் தோல்விகள் மற்றும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு தவறியதாக குற்றசாட்டியுள்ளனர். இதனிடையே, துனிசியா அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி கடந்த வருடம் ஜூலை மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக அக்டோபரில் அங்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.71 சதவீதம் வாக்குகளைப் பெற்ற கைஸ் சையத் அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

5 minutes ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

30 minutes ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

1 hour ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

2 hours ago

அதிரும் களம்!! கோவையில் விஜய்.., துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ.!

கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…

2 hours ago

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

3 hours ago