ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது. இவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா போட்டியிட்டார். இதனிடையே வாக்குசீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் அதிபர் அஷ்ரப் கானி 923868 (50.64%) வாக்குகளை பெற்று 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட அப்துல்லா 39.52% வாக்குகளை பெற்று தேர்தலில் தோல்வியை தழுவினார்.
பின்னர் அப்துல்லா சார்பில் இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும், தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நிலையில் 2வது முறையாக எண்ணப்பட்ட வாக்குகளிலும் 50.64% வாக்குகளை பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் அஷ்ரப் கானி 2வது முறையாக வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அதிபர் பதவியை தக்கவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…
டெல்லி : இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் 2025 - 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடளுமன்றத்தில் தாக்கல்…
பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. 1 சவரன் தங்கம் விலை கடந்த…