ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு தல அஜித் போனில் பாராட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து சமீபத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகியது.
தற்போது வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்களிலிருந்து சாதாரண மக்கள் வரை படத்தை பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களை கூறி பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற பொன்மகள் வந்தாள் படத்தினை தல அஜித் அவர்கள் பார்த்து விட்டு ஜோதிகாவிற்கு கால் செய்து பாராட்டியுளளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம், ஜோதிகாவிற்கு போனில் கால் செய்து, நேர்கொண்ட பார்வை படத்தை மிஞ்சிட்டீங்க, இதெல்லாம் சரி இல்லை ஜோ என்றும், படம் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்றும், நீங்க நடிப்பில் சும்மா பின்னிட்டீங்க என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மேலும் இந்த படத்தை தயாரிக்க சூர்யா எடுத்த முடிவு துணிச்சலானது என்றும், மிக்க மகிழ்ச்சி என்றும், இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அஜித் அவர்கள் கூறியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…