அருண் விஜய்யின் 33 வது படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தனது 33 வது படத்தில் நடித்துவருகிறது. இந்த படம் இயக்குனர் ஹரிக்கு 16 வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.இந்த திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு,கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார்,ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். இந்த படத்திற்கான பூஜை கடந்த 3 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு பழனியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு தூத்துக்குடி, காரைக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படத்திற்கான டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…