ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் விஷாலின் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூன். கடைசியாக இவர் அர்ஜூன் இயக்கத்தில் உருவான ‘சொல்லி விடவா’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, சமீபத்தில் நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. எனவே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஒரு மருத்துவ குழுவினரின் வழிநடத்துதலின் படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள், தயவு செய்து கவனமாக இருங்கள் என்றும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்,தயவு செய்து முகமூடியை அணியுங்கள், அதிக ஆரோக்கியத்துடன் விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் அர்ஜுன் அவர்களின் மருமகனும், நடிகருமான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…