தற்பொழுது நிறைவடைந்துள்ள பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகிய நடிகர் ஆரி வெளியில் வந்த கையோடு இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் போலீசாக நடிக்கிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். பல கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த கையோடு அபின் எனும் இயக்குனரின் இயக்கத்தில் உருவாகக் கூடிய ஒரு புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.
வித்யா பிரதீப் அவர்கள் கதாநாயகியாக இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ஆரி அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பூஜையில் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் பங்கேற்று துவக்கி வைத்துள்ளார். ஏற்கனவே ஆரி நடிப்பில் அலேகா, பகவான் ஆகியவை உருவாகி வரும் நிலையில் இவை இறுதி கட்டத்தை எட்டி விட்டது எனவும் விரைவில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…