ஏசி அறையில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்…? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!

Published by
லீனா

இன்றைய நவீன மயமான உலகில் பொதுவாக அதிகமானோர் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். இது நமக்கு வியர்வை தொல்லை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை தவிர்த்தாலும், நமது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் ஏசி அறையில் இருந்து வேலைபார்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

தலைவலி

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்கள் சைனஸ் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்கள். ஏசியின் வெப்பநிலை அதிகரித்தாலோ அல்லது குறைந்துவிட்டாலோ நீங்கள் தலைவலி மற்றும் எரிச்சலை உணரலாம்.

காய்ச்சல்

ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் சோர்வு ஏற்படலாம். நீங்கள் ஏ.சி.யை விட்டுவிட்டு சாதாரண வெப்பநிலை அல்லது வெப்பமான இடத்திற்குச் சென்றால், நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்படலாம். ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் மூலம், காய்ச்சல், குளிர், சளி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.

கண் பிரச்சனை

ஏ.சி.யில் உட்கார்ந்திருப்பது கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது கண்களில் அரிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இது வெண்படல பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. கண்கள் சிவத்தல், எரித்தல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடும்.

தோல் வறட்சி

ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை முற்றிலுமாக  வற்றி போக பண்ணுகிறது.

உடல் எடை

ஏசியின் பயன்பாடு நம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், குளிர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொள்வதன் மூலம் நம் உடலின் ஆற்றல் தீர்ந்துவிடாது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது இது உடல் பருமனை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

Published by
லீனா
Tags: ac roomwork

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago