நீங்கள் கிரீன் டீ அருந்தும் பழக்கமுடையவரா..? அப்ப இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்..!

Published by
லீனா

க்ரீன் டீ அருந்தும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்

நம்மில் பலர் கிரீன் டீ அருந்தும் பழக்கமுடையவராக இருப்போம். இந்த டீயால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றாலும்,  டீயை அருந்தும் போது எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். ஆயின் டீயை பொறுத்தவரையில், உடல் எடையை குறைக்க உதவுகிறது: செரிமானத்தை மேம்படுத்துகிறது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

தற்போது இந்த பதிவில் க்ரீன் டீ அருந்தும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

வெறும் வயிற்றில் குடிப்பது

food [Imagesource : Representative]

வழக்கமான தேநீருக்குப் பதிலாக க்ரீன் டீதான் நமக்கு ஆரோக்கியமானது என்று நினைத்துக் கொண்டு காலைப் பொழுதைத் தொடங்குகிறோம்.  க்ரீன் டீயில் டானின்கள் உள்ளன, அவை வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கலாம், இது வெறும் வயிற்றில் இருந்தால் வயிற்று அசௌகரியம் அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். எனவே செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்க கிரீன் டீ குடிப்பதற்கு முன் ஏதாவது சாப்பிடுவது நல்லது.

அளவுக்கதிகமாக குடிப்பது

க்ரீன் டீ எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது என்பது உண்மைதான், ஆனால் எதையும் அதிகமாக உட்கொள்வது நமக்கு நல்லதல்ல. கிரீன் டீயை அதிகமாக குடிப்பதால் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். உணவியல் நிபுணர் ஷிகா குமாரி தினசரி உட்கொள்ளலை 2-3 கப் வரை அருந்தலாம் என அறிவுறுத்துகிறார்.

இரவில் குடிப்பது

morning sleep [Imagesource : Representative]

கிரீன் டீ ஆரோக்கியமானதாக இருக்கலாம், ஆனால் அதில் காஃபின் உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் இது உறங்கும் நேரத்திற்கு முன் உட்கொண்டால் உங்களுக்கு தூக்கத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, நீங்கள் தூங்கத் திட்டமிடுவதற்கு குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன் கிரீன் டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே குடிப்பது

உணவு உண்ட உடனேயே க்ரீன் டீ குடிப்பது, உணவில் இருந்து இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதில் குறுக்கிடலாம், இது காலப்போக்கில் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். க்ரீன் டீ அருந்துவதற்கு முன், சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கொதிக்கும் நீரில் காய்ச்சுவது

tea [Imagesource : Timesofindia]

 நாம் அனைவரும் கிரீன் டீயை கொதிக்கும் நீரில் அல்லது வேகவைத்த தண்ணீரில் காய்ச்சிக்கிறோம். கொதிக்கும் நீரை உபயோகிப்பது கிரீன் டீயில் உள்ள நன்மை பயக்கும் சேர்மங்களை அழித்து, கசப்பான சுவையை ஏற்படுத்தும். கிரீன் டீயை காய்ச்சுவதற்கு முன், தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து, அதன் வெப்பநிலை 80-85 டிகிரி செல்சியஸ் வரை குறைய வேண்டும். அதன்பின் தான் அதை அதை அருந்த வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

“தமிழ்நாட்டில் எந்த விதத்திலும் மதவாதம் நுழைய முடியாது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…

1 minute ago

காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…

24 minutes ago

தமிழ்நாடு போலீசுக்கு நாங்க என்னென்ன செய்திருக்கோம் தெரியுமா? முதலமைச்சர் போட்ட பட்டியல்…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…

29 minutes ago

அடிக்குற வெயிலுக்கு மழை அப்டேட்.! இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…

53 minutes ago

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம், வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…

1 hour ago

முடிந்தது விசா கால கெடு.., புதுச்சேரியில் பாகிஸ்தான் பெண் மீது வழக்கு.!

புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…

2 hours ago