கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!

Default Image
  • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் நடிகர், நடிகைகள் என திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதோடு அது குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

மேலும், இவரது மகன் அமீனுடன் முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்கள் போட்டு விட்டீர்களா? என்று கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்