சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற செப்டம்பர் மாதத்தில் முடித்து விட்டு படத்தை ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அடுத்ததாக இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா எந்த இயக்குனருடன் இணையப்போகிறார் என்பதை குறித்த தகவல்கள் தினம் தினம் வெளியாகி கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் கூட சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யா வாடி வாசல் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு பிரமாண்ட திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான கஜினி, 7 ஆம் அறிவு ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…