கடந்த 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக கருதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. தற்போது ஜனவரி மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அத்தனையும், அந்த நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியில் கடைபிடிக்கப்பட்டன. காரணம், அப்போதைய ஜூலியன் நாள்காட்டியில் ஏப்ரல் 1-ந்தேதி தான் ஆண்டின் தொடக்கமாக புத்தாண்டு தினமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
பின் 13-ம் கிரகரி என்ற போப் ஆண்டவர் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டு கிரகோரியன் ஆண்டு கணிப்பு முறையை கொண்டுவந்தார். அதை பல நாட்டினரும் ஏற்க மறுத்தனர். ஆனால், ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டவர்கள், அதை ஏற்க மறுத்தவர்களை முட்டாள்களாக கருதிய அவர்கள் ஒவ்வொரு ஏப்ரல் 1-ந்தேதியும் அவர்களுக்கு வெற்று பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்து அவர்களை ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் உலகம் முழுவதும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டாக பின்பற்ற தொடங்கிய பிறகும் கூட முட்டாள்கள் தினம் மறையவில்லை. மாறாக, ஒருவரையொருவர் ஏமாற்றும் தினமாக அது உருவெடுத்துவிட்டது. அந்த வகையில் வரலாற்றில் இன்று உலக முட்டாள்கள் தினம் இன்று..
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.…
சென்னை : 1967 ஆம் ஆண்டு தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனை நாளாக மாறியது. ஏனென்றால்,…