அமெரிக்காவில் சுபரீம் கோர்ட் உள்ளது. இதற்கு அடுத்த நிலையில் கொலம்பியா சர்கியூட் அப்பீல் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான ஸ்ரீ. சீனிவாசன் (52) என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன்.
இவர் திருநெல்வேலி அருகில் உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்து உள்ளார்.
1960-களில் இவர்களது குடும்பம் அமெரிக்காவிற்கு குடியேறியது. ஸ்ரீ. சீனிவாசன் பிறந்தது சண்டிகார். பட்டம் படித்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் பின்னர் அங்கேயே சட்டப்பட்டமும் பெற்று தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
ஸ்ரீ. சீனிவாசன் அமெரிக்க அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். பின்னர் 2011-ம் ஆண்டு முதல் முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார். இந்நிலையில் தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…