உரிய உரிமை பெறாத காரணத்தினால், சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39,000 கேம்ஸ் உட்பட 46,000 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சீன ஆப் ஸ்டோரில் சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமை பெறாத காரணமாக 46,000 செயலிகளை ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில், தற்பொழுது நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நீக்கப்பட்ட 46,000 செயலிகளில் 39,000 செயலிகள் கேம்கள் ஆகும். அதுமட்டுமின்றி, இது ஆப்பிள் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிமாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்துப்படி, தடைசெய்யப்பட்ட கேம்ஸில் Ubisoft-ன் NBA2K20 மற்றும் Assassin’s Creed Identity ஆகிய பிரபல கேம்கள் அடங்கும் எனவும், இதில் 1,500 கட்டணம் செலுத்தும் ஆப்களில் வரும் 74 ஆப்கள் மட்டுமே தப்பித்துள்ளது. அதற்கு காரணம், அது ஆப்பிள் நிறுவனத்தின் கோள்கைகளை ஒப்புக்கொண்டு அதன்படி செயல்படுவதே ஆகும்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…