மேற்கு வேர்ஜினியாவில் 42 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக செலுத்தப்பட்ட ஆன்டிபாடிகள்!

Default Image

மேற்கு வேர்ஜினியா பகுதியில் 42 பேருக்கு கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக தவறுதலாக ஆன்டிபாடிகள் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களிலும் இதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல இடங்களில் தற்போது தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வேர்ஜீனியா பகுதியில் 42 பேருக்கு தடுப்பூசிக்கு பதிலாக ரெஜெனெரான் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சையை வழங்கியுள்ளனர்.

ஆன்டிபாடிகள் செலுத்தப்பட்ட 42 பேரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள துணை ஜெனரல் மேற்கு வேர்ஜீனியா தேசிய காவலர் ஒருவர், என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட உடன் நாங்கள் தகவல் அளிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று இது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக விநியோகம் செய்யப்பட்ட மருந்துகளை தடுத்து நிறுத்தினோம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்