இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரணுடன் இணைந்து மற்றொரு டாப் ஹீரோ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதனை குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இந்த படத்தில் முதலில் பவன் கல்யாண் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்திருந்ததாகவும் ,தற்போது அந்த வேடத்தில் மற்றொரு டாப் நடிகர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்த நடிகர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை எனவும் ,பிற மொழியை சார்ந்த டாப் ஹீரோ தான் ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் உண்மையெனில் அந்த மற்றொரு டாப் ஹீரோ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…