ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது.
உக்ரைனை 7-வது நாளாக ரஷ்யா உக்கிரமாக தாக்கி வருகிறது. அந்த வகையில்,உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதியில் மிகப்பெரிய அளவில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே,உக்ரைனில் இருந்து வெளியேறி அதன் அண்டை நாடுகளான ருமேனியா,போலந்து,ஹங்கேரி வரும் இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.அதன்படி,60 % இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி விட்டதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து இந்தியர்களுடன் மேலும் ஒரு விமானம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளது.
அதே சமயம்,உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஹிண்டன் விமான தளத்தில் இருந்து இரண்டு இந்திய விமானப்படை விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரிக்கு புறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…