பெய்ரூட் துறைமுகத்தின் இன்று எண்ணெய்கள் மற்றும் டயர்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தீயை அணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இராணுவ ஹெலிகாப்டர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழப்பு பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. தீ விபத்து நடந்த இடத்தில் ஒரு பெரிய புகை வெளியேறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கு முன் ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 191 பேர் உயிரிழந்தனர். 6,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் துறைமுகமும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…