அமெரிக்காவில் பிலாடெல்பியா நகரில் 27 வயதான “வால்டர் வாலஸ்” என்ற கருப்பினத்தவர், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் காவல் அதிகாரி கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயீடு என்பவரின் கழுத்தில் முட்டியை வைத்து அழுத்தியதால், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்கா மட்டுமின்றி, பல உலக நாடுகளில் கடுமையான போராட்டங்கள் நடந்து வந்தது.
அந்த சம்பவம் நடந்து முடிந்து சிறிது காலங்களே ஆன நிலையில், தற்பொழுது அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தவகையில், பிலாடெல்பியா நகரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் 27 வயதான “வால்டர் வாலஸ்” என்ற கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
போராட்டத்தின்போது அவர் கையில் கத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அதனை கவனித்த போலீசார், அவரை கத்தியை கிழே போடுமாறும் எச்சரித்தும் கத்தியை கீழே போட மறுத்த காரணத்தினால், அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்பொழுது வால்டர் வாலஸ் உயிரிழந்ததை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காரணத்தினால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…