பிரபுதேவா இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபுதேவா இருட்டு அறையில், முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடிகை, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…