திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படஉள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது பஞ்ச பூதமும் நானே,நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மூலவர் சன்னிதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
இதன் பின்னர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் இதைத் தொடர்ந்து,தீப தரிசன மண்டபத்தில் சிறப்பு அலங்கரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.அப்போது உலகுக்கு ஆண்-பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக தானே அர்த்தனாநாரீஸ்வரர் – ஆக எழுந்தருளி காட்சியும் தருகிறார்.
தங்கக் கொடி மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்ற 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.அய்யன் ஜோதி வடிவமாக காட்சி கொடுப்பதால், மகாதீபம் ஏற்றியதும் ,மூலவர் சன்னிதி மூடப்படும்.மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் கண்டு தரிசிக்கலாம்.
அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்ற 200 கிலோ மற்றும் 5 அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரைக்கு நேற்று முன் தினம் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பவுர்ணமிக்கு சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…