ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு  முன்னேறினார் அன்கிதா!

Default Image

இந்திய வீராங்கனை அன்கிதா மத்திய பிரதேசத்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு  முன்னேறினார்.

ம.பி.,யில் உள்ள குவாலியரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் யனா சிஜிகோவாவுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றிய அன்கிதா, இரண்டாவது செட்டில் 4-0 என முன்னிலை பெற்றிருந்தார். சிஜிகோவா காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இதனையடுத்து, அன்கிதா பைனலுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், இந்த ஆண்டில் முதல் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் பிரான்சின் அமான்டினி 6-4, 6-2 என சுலோவாகியாவின் டெரிசாவை வீழ்த்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்