10-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் நான் நிற்கலப்பா என்று கூறி விலகும் அனிதா.!

Default Image

யார் யார் சிறந்தவர்கள் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் நின்ற அனிதாவை 10-வது இடத்தில் நிற்க சொன்னதால் நான் இந்த போட்டிக்கு வரவில்லை என்று கூறி விலகுகிறார்.

கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக யார் யார் விளையாடுனார்கள் என்று 1 முதல் 13 வரிசைப்படுத்துமாறு பிக்பாஸ் கூறியிருந்தார் .அதற்கு பலர் தாங்கள் தான் சிறப்பாக விளையாடியதாக கூறி வாக்குவாதம் செய்து வந்தனர் . இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் முதலிடத்தில் சனம், இரண்டாவது இடத்தில் அனிதாவும், மூன்றாவது இடத்தில் பாலாஜியும், நான்காவது இடத்தில் அர்ச்சனா, ஐந்தாவது இடத்தில் ரியோ, ஆறாவது இடத்தில் ஆஜித் ஆகியோர் உள்ளனர். அதே போல ஏழாவது இடத்தில் ரம்யாவும் ,எட்டாவது இடத்தில் ஜித்தன் ரமேஷ் அவர்களும், கடைசி நான்கு இடத்தில் சோம்,கேபி, ஷிவானி மற்றும் நிஷா ஆகியோர் உள்ளனர் .

இதில் இரண்டாவது இடத்தில் நிற்கும் அனிதாவிற்கு சாதகமாக யாரெல்லாம் ஓட்டு போடுவீர்கள் என்று ஆரி கேட்க ,கேபி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரும் அனிதா இரண்டாவது இடத்தில் நிற்பதை ஏற்று கொள்ள முடியாது என்று கூற அனிதா அதிலிருந்து விலகி இந்த போட்டிக்கு நான் வரவில்லை, நிற்கவில்லை என்று கூறுகிறார்.

கடைசியாக முதல் ஒன்பது இடங்களை ஆரி,சனம், பாலாஜி, அர்ச்சனா,ரியோ,ஆஜீத்,ரம்யா, ரமேஷ்,சோம் ஆகியோர் நிற்க பத்தாவது இடத்தில் நிற்க அனிதாவை கூற அவர் நான் நிற்கமாட்டேன் என்கிறார் . போட்டியாளர்கள் அனைவரும் காத்திருப்பதாக கூற அனிதாவோ நான் ஏன் நிற்க வேண்டும் என்று கூறுகிறார்.யார் யார் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
rohit sharma Anjum Chopra
Mamata Banerjee Yogi Adityanath
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat