அங்கொட லொக்காவின் கூட்டாளியான அசித ஹேமதிலகவை இலங்கை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா, தமிழகத்தில் உள்ள கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் லொக்காவின் காதலி உட்பட 3 பேர் கைது செய்த நிலையில், தற்பொழுது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கொட லொக்காவின் கூட்டாளியான “சோல்டா” என்ற அசித ஹேமதிலக, போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார். அப்பொழுது அவரை இலங்கை போலீசார் சுட்டுகொன்றனர். அதனை இலங்கை மேற்கு மாகாணத்தின் பொறுப்பு டி.ஐ.ஜி தேசபண்டு தென்னகூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
சோல்டா, கடந்த 2017 -ம் ஆண்டு அழகுநிலையம் ஒன்றில் உள்ள ஒரு பெண்ணை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…