பாகற்காய் என்றாலே பலருக்கும் பிடிக்காது. அதில் காணப்படக்கூடிய கசப்பு தன்மை தான் இதற்கு காரணம். ஆனால் இந்த பாகற்காயை கசப்பு தன்மை குறைவாக வித்தியாசமான முறையில் ஆந்திரா ஸ்டைலில் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பாகற்காயை நன்றாக கழுவி வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பதாக ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். மற்றொரு சட்டியில் எள் மற்றும் சீரகத்தை பொன் நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். இவற்றை நன்றாக வதக்கி மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பாகற்காயை இவற்றுடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதங்க விடவும். அதன் பின் புளிக்கரைசல் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதனுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால் அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு வீட்டிலேயே தயார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…