மியான்மரிலிருந்து 7 நாட்கள் பெற்றோர்களை தோள் கூடையில் சுமந்த அன்பு மகன்…!

Default Image

மியான்மரிலிருந்து பங்காளதேஷ் வரை தனது பெற்றோர்கள் இருவரையும் 7 நாட்களாக தோள் கூடையில் வைத்து சுமந்து சென்ற மகன். 

மியான்மரை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது பெற்றோர் இருவரும் வயதான நிலையில் இருந்ததால், அவர்களை நடத்தி கூட்டி வர முடியாது என்பதற்காக, தனது தோள் பட்டையில் கம்புகளை வைத்து இருபுறமும் கூடை கட்டி, அதில் தனது வயதான பெற்றோர்கள் இருவரையும் வைத்து சுமந்து வந்துள்ளார்.

மியான்மரிலிருந்து பங்களாதேஷ் வரை 7 நாட்கள் இவர்கள் இருவரையும் இந்த இளைஞன் சுமந்து வந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இளைஞனை நவீனகால ஷ்ரவண் குமார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்