அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கேம்டூல் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிகாகோவுக்கு வடமேற்கில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் உள்ள மிகப்பெரிய ரசாயனம் தயாரிக்கும் நிறுவனமான கேம்டூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி, இது காலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆலையின் மேற்கூரையில் ஏற்பட்ட நெருப்பு ஆலை முழுவதையும் ஆட்கொண்டதால், கரும்புகையால் அவ்விடம் சூழ்ந்துள்ளது.
ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் அங்கிருக்கும் 70 தொழிலாளர்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். மேலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, இருந்த போதிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் இன்ஜீன் ஆயில்கள் மற்றும் அனைத்து விதமான கிரீஸ்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி, இங்கு பலகோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து குறித்த விசாரணையில் ராக்டன் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…