அமெரிக்க ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து..!

Default Image

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கேம்டூல் ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சிகாகோவுக்கு வடமேற்கில் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் உள்ள மிகப்பெரிய ரசாயனம் தயாரிக்கும் நிறுவனமான கேம்டூல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி, இது காலை 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஆலையின் மேற்கூரையில் ஏற்பட்ட நெருப்பு ஆலை முழுவதையும் ஆட்கொண்டதால், கரும்புகையால் அவ்விடம் சூழ்ந்துள்ளது.

ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் அங்கிருக்கும் 70 தொழிலாளர்களை பத்திரமாக  வெளியேற்றியுள்ளனர். மேலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, இருந்த போதிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையில் இன்ஜீன் ஆயில்கள் மற்றும் அனைத்து விதமான கிரீஸ்களும் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி, இங்கு பலகோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணையில் ராக்டன் காவல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்