கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வரும் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அமிதாப் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கும், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று இல்லை என்பதும், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களின் நலன் குறித்து விசாரித்தும், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அமிதாப் பச்சன் சிகிச்சை பெற்று வரும் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நானாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதனுடன் நெருக்கடியான இந்த இக்கட்டான சூழ்நிலைகளில், வெள்ளை கோட்டில் உள்ள இவர்கள் கடவுளின் உருவம் என்றும், அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நமது உயிர்களை காப்பாற்றுகிறார்கள். மேலும் கூறிய அமிதாப் பச்சன், பயம் மற்றும் மனசோர்வு எப்போதும் இருக்கும் என்றும், யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அனைவரும் கண்டிப்பாக மீண்டு வருவோம் என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…