மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் மகன்.!

Published by
Ragi

அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாகவும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அது மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அமிதாப் பச்சனுக்கு இன்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் எனது தந்தைக்கு சமீபத்திய கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவர் இனி முதல் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து கொள்வார் என்றும், உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்த ட்வீட்டில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீண்டும் எங்கள் குடும்பத்தினர் மீது நீங்கள் காண்பிக்கும் தொடர்ச்சியான பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. விரைவில் கொரோனாவை வென்று ஆரோக்கியமாக வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago