மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் மகன்.!

Published by
Ragi

அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாகவும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அது மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அமிதாப் பச்சனுக்கு இன்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் எனது தந்தைக்கு சமீபத்திய கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவர் இனி முதல் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து கொள்வார் என்றும், உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்த ட்வீட்டில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீண்டும் எங்கள் குடும்பத்தினர் மீது நீங்கள் காண்பிக்கும் தொடர்ச்சியான பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. விரைவில் கொரோனாவை வென்று ஆரோக்கியமாக வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

4 minutes ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

26 minutes ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

2 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

வெடித்த சர்ச்சை : ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்! நடந்தது என்ன?

கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…

2 hours ago

“ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்” – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!

தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…

3 hours ago