இன்று மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை தாக்கல் செய்கிறார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை மக்களவையில் குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதாவை இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த சட்டமானது குற்றவாளிகளை அடையாளம் காணுதல் அவர்கள் பற்றிய அடையாளம் மற்ற தகவல்களை பாதுகாத்தல் போன்றவைகளை நோக்கமாக கொண்டுள்ளது.இப்பொழுது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் மூலம் குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெறாத நபர்கள் கைவிரல் பதிவுகள், உள்ளங்கை ரேகைகள் பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள் ஆகிவற்றை நீதிபதியின் உத்தரவு பின்னரே எடுக்க முடியும்.
ஆனால் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதாவானது கைது செய்யப்பட்ட குற்றவாளி அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் தங்கள் பற்றிய அடையாளங்களை காவல்துறையினருக்கு தர வழிவகுக்கும்.
இது காவல்துறையினருக்கு கைவிரல் பதிவுகள், உள்ளங்கை ரேகைகள் பதிவுகள், கால்தடம் பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன்கள், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள், அவற்றின் பகுப்பாய்வு, கையொப்பங்கள் உட்பட நடத்தை பண்புகளை சேகரிக்க அனுமதிக்க வழிவகுக்கிறது.
இந்த புதிய மசோதாவானது, தற்போதுள்ள ”கைதிகளை அடையாளப்படுத்தும் சட்டம், 1920”ஐ ரத்து செய்யும்.