கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்று உள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொடிய கொரோனா வைரஸ், அனைத்து வயதினரையும் தாக்கக் கூடியது. ஆனால், இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்களான வயதானவர்களே. இந்நிலையில், அமெரிக்காவின், சிகாகோவில், 1 வயது கூட நிரம்பாத குழந்தைக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இது உலகம் முழுவதையும் அதிர்ச்சி அடையும் விதமாக அமைந்தது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், அந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனை அந்த மாகாணத்தின் கவர்னரும் உறுதி செய்தார். உலகிலேயே இந்த வைரஸ் பாதிப்பால், 1 வயதுக்குட்ட குழந்தை உயிரிழப்பது, இதுவே முதல் முறை என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு வயது குழந்தைக்கு வேறு உடல் பிரச்சனைகளும் இருந்துள்ளதாக மருத்துவர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…