யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக தனிமையான நாடுகளில் ஒன்று, வடகொரியா. அந்நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன், உலகின் மிக சக்திவாய்ந்த மனிதராக கருதப்படுகிறார். வடகொரியாவின் அனு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி, பல்வேறு அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா நடத்தி வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்கா தான் எங்களின் மிகப்பெரிய எதிரி என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சி கொரியாவின் ஐந்தாம் ஆண்டு மாநாட்டில் பேசினார். இதுகுறித்து பேசிய அவர், எங்கள் புரட்சிக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதில் குறியாக இருப்பதாகவும், அங்கு யார் ஆட்சியில் இருந்தாலும் பரவாயில்லை, வட கொரியாவுக்கு எதிரான கொள்கையின் உண்மைத்தன்மை, ஒருபோதும் மாறாது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு உலகளவு பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், இதற்கு முன் இரு நாடுகளும் எதிரிகளாக இருந்து வந்ததே ஆகும். அதுமட்டுமின்றி, கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பாலும் இருநாட்டு உறவில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…
கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…
கொல்கத்தா : கடந்த சீசன் ஐபிஎல் போட்டியில் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்த முறை அவரை கொல்கத்தா…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும், ராயல்…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியும்,…