ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என அந்நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகம். இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு இருதரப்பு தேர்தல் பிரச்சாரங்களும் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், பால்டிமோரில் குடியரசு கட்சி நிர்வாகிகள் இடையே அமெரிக்க நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் பேசினார்.
அப்பொழுது அவர், சட்டம் மற்றும் நீதியை நிலைநிறுத்தும் துறைகளுக்கான நிதியை குறைக்க போவதாக ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியதை சுட்டிக்காட்டிய மைக் பென்ஸ், ஒருவேளை அவ்வாறு நடந்தால், அமெரிக்காவில் வன்முறை தலைதூக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…
சென்னை : நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி…