ரஷ்யாவின் குறுக்கீடு நிச்சயம் அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலிலும் இருக்கும்!
தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் டேனியல் கோட் (Daniel Coats) அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் குறுக்கீடு செய்ய ரஷ்யா முயற்சிக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு, முறைகேடுகள் செய்ததாகவும், இதனாலேயே டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும், அமெரிக்க அதிபர் டிரம்பும் மறுத்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தலில், ரஷ்யா குறுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை இயக்குநர் டேனியல் கோட் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னோட்டமாக சமூக வலைதளங்களில் ரஷ்யர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ள டேனியல் கோட், அதற்கு சில அமெரிக்கர்களும் ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.