அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மாவை 2 மாதங்களாக காணவில்லை என சந்தேகம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரபல தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜாக் மாவை இரண்டு மாதங்களாக காணவில்லை என்று தகவல் கூறப்படுகிறது.

சீனாவின் முக்கிய தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜாக் மாவை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜாக் மா 2 மாதங்களாக எந்த பொது வெளிக்கும் வரவில்லை என்றும் அவர் தொகுத்து வழங்கி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம், உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இ-காமர்ஸ் நிறுவனத்தில் சீனாவில் ஆய்வுகள் அதிகரித்த பின், அக்டோபர் மாத இறுதியில் ஜாக் மா-வின் தனது சொத்து மதிப்புகளில் இருந்து 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வலைத்தளத்தில் அறிவிப்பின்படி, ஜாக் மா-வின் சொத்து மதிப்பு 61.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 50.9 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

இதனால் உலக பணக்கார பட்டியலில் ஜாக் மா, 25-ஆம் இடத்தில் இருந்து வருகிறார். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி, அலிபாபா நிறுவனத்தின் தனியுரிமை (Monopoly) நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சீன அரசு விசாரணையை தொடங்கியது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் குறையத் தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தின் கடன், காப்பீடு மற்றும் செல்வ மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை சரிசெய்ய அதிகாரிகள் அலிபாபா நிறுவனத்தை கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

13 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

50 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago