ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘திட்டம் இரண்டு’ திரைப்படத்தை ஓடிடி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் மற்றும் வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
மான்ஸ்டர் மற்றும் மாஃபியா ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசாக தயாரிக்கியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த ‘திட்டம் இரண்டு’ திரைபடத்தை நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்ட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…