கொரோனா சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்!

Default Image

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

பாலிவுத் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, அபிஷேக் பச்சனுக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தென்பட்ட நிலையில், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். பின் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நடிகர் அபிஷக் பச்சன், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உங்கள் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.  ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர்  எதிர்மறை முடிவுகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்.’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்