கடந்த 8-ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் சில நிமிடங்களில் லாஜ் அபத் என்ற பகுதியில் உள்ள விவசாய இடத்தில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 176 பேரும் பலியானார்கள்.
இதில் ஈரானியர்கள் 82 பேரும், கனடாவை சேர்ந்த 63 பேரும், உக்ரைனை சேர்ந்த 11 பேரும், சுவீடனை சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். பின்னர் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறால் இச்சம்பவம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தான் இந்த விமானம் சிக்கியதாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்ததை தொடர்ந்து மறுத்து வந்த இரான், தற்போது முதல் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், விமானத்தை ஏவுகணையால் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் இன்று காலை இரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மனித தவறுகளின்’ காரணமாக உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது ஈரான் அரசு. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…