#Breaking:இந்தியா உடனான விமான சேவை ரத்து -ஹாங்காங் அரசு..!

Default Image

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது அதிகரித்து வரும் நிலையில்,நாளை முதல் மே மாதம் 3 ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமான சேவையையும் ஹாங்காங் ரத்து செய்துள்ளது.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,1,619 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கொரோனா பரவல் எதிரொலி காரணமாக ஹாங்காங் விமானப் போக்குவரத்து துறை நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து விமானச் சேவையையும் ரத்து செய்துள்ளது.

மேலும்,கொரோனா தொற்றானது அதிகரித்து வரும் பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடனான விமானச் சேவையையும் நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்