வாக்காளருக்கு பணம் தர முயன்ற பாமகவினர் கைது.., அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு..!

Default Image

அணைக்கட்டு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

வேலூரை சேர்ந்த பாமக முன்னாள் மாவட்ட தலைவர் புருஷோத்தமன், சதீஷ் மற்றும் கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் பள்ளிகொண்டா சோதனைச்சாவடி அருகே பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனையில் நிற்காமல் சென்ற காரை வேலூர் மக்கான் சந்திப்பு அருகே மற்றொரு பறக்கும்படை மடக்கி பிடித்தது.

அந்தக் காரில் 4 லட்சம் பணம், அதிமுக வேட்பாளரின் மாதிரி வாக்குச்சீட்டுகளுடன் நள்ளிரவில் காரில் சென்றது தெரிய வந்தது. மூன்று பேரிடம் விடிய விடிய தீவிர விசாரணை நடத்திய பிறகு காலையில் கைது செய்யப்பட்டனர்.

வேட்பாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்ற புகாரில் அணைக்கட்டு அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிமுக வேட்பாளர் வேலழகன் மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்