அதிமுக கூட்டணி..முதல்வர் பரபரப்பு பேச்சு…!!
சென்னை ராயப்பேட்டை_யில் மாற்று கட்சியினரை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது உள்ளாட்சி மன்ற தேர்தலை அதிமுக கொண்டு வந்த போது திமுக நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.முக.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருக்கும் போது மக்களுக்கு என்ன செய்தற் என்று கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து பேசிய முதல்வர் தமிழகத்துக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி.அதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே பிரதமர் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.