கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும் ஆதலால், சில மாதங்களுக்கு அவர்களை கொரோனா தாக்க வாய்ப்பில்லை என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்து வீடு திரும்பியவரை மீண்டும் கொரோனா தாக்குமா என்கிற சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுந்தவண்ணம் இருக்கிறது.
இதற்கு பதிலளிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை பெரும்பாலும் கொரோனா மீண்டும் தாக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால், அதற்குறிய அதிகாரபூர்வ அறிக்கைகள் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை எனவும் கூறுகின்றனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்தவர் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவியதாக இதுவரையில் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சிறு ஆய்வில், கொரோனா போல பரவிய வைரஸ் தாக்கி குணமடைந்தவர்கள் மீண்டும் 3 மாதத்திலிருந்து, ஒரு வருடத்திற்குள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும்,
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருக்கும் ஆதலால், சில மாதங்களுக்கு அவர்களை கொரோனா தாக்க வாய்ப்பில்லை எனவும், கூறுகின்றனர். ஆனால், அந்த ஆண்டிபாடிகள் சில மாதங்கள் மட்டுமே உடலில் இருக்கும். மேலும், அவர்களுக்கு வேறு நோய்கள் தாக்கவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடுகின்றனர். விரைவில் கொரோனாவை நீண்ட காலம் தடுத்து நிறுத்தும் தடுப்பூசி கிடைக்கும்.’ எனவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…